பேசி என்ன பயன்?
என் மௌனம்
உனக்கு புரிந்து இருந்தால்
நான் உச்சரிக்கும் வரிகளில்
வலம் வரும்
வார்த்தைகளின் வலிகள்
உனக்கு புரிந்திருக்கும்!
வார்த்தைகளை
கோர்த்திருக்கும்
எழுத்துகளின்
ஏக்கம் புரிந்திருக்கும்!
ஆனால்
உனக்கு தான் என்
மௌன மொழியே
புரியாதே!
பின் உன்னிடம்
பேசி எனன பயன்?
கடவுள் இருக்கானா?
தொட்டிலில்
சிசுவும்
கட்டிலில்
முதுமையும்
பார்வையில்
பேசிக் கொண்டன…
கடவுள் இருக்கிறானா என?
அனாதை இல்லத்தில்.
No comments:
Post a Comment