Tuesday, July 19, 2022

                                      சொல் அமிழ்து


நீ
உனக்கு சொந்தமில்லா
இழிச்சொல்லையும்
பழிச்சொல்லையும்
உதிர்ப்பது ஏன்?

உன் உதடுகள் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
அடுத்தவரின் வாழ்க்கைக்கு
சொந்தமானது என
மறந்தது ஏன்?

தீ பிழம்பாய் சுட்டு எரிக்காமல்
அமிழ்தாய் இனிக்கட்டுமே உனது சொல்!

இனிய நாவே
கனிவான சொல்
உதிர்த்து
நீடூழி வாழ்!

Sunday, July 3, 2022

 பொக்கை (கள்) 


அலாரம் அடித்தது போல்
ஆதவன் உதயமாகிவிடுகிறான்
யுகங்களாய் நகர்கின்றன
நொடிகள்!

எப்படிக் கழிப்பது இந்த
பகற்பொழுதை
என்பதே அவர்களின்
அச்சம்!

இரவுப் பொழுதில்
வராத தூக்கத்தை
ஏமாற்றி
போர்வைக்குள்
கண் முடி ஒளிந்து கொள்கிறார்கள்!

ஆனால்
பகலில்
பேச்சுத் துணையின்றி
பெற்ற மனம் பரிதவிக்கிறது!

கொஞ்சி யானை விளையாட்டு விளையாட
பேரன் பேத்தி அருகில் இல்லை!

சாப்பிடிங்களா என கேட்க
மகனும் மகளும் பக்கத்தில் இல்லை!

உறவுகளின் விழாவில்
கலந்துக்கொண்டு
உறவாட வழியில்லை!

பொக்கைகள் இரண்டும்
அண்ணாந்து விட்டத்தை பார்த்தபடி
பல மணி நேரம்
ஊடகங்கள்
பார்த்தபடி
சில நேரம்
நினைவலைகளில்
வாழந்தபடி
நடைப்பிணமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
சிலர்
முதியோர் இல்லங்களிலும்
சிலர்
தனித்துவிடப்பட்டத் தாழ்வாரங்களிலும்!

அக்குபங்சர் ஒரு அறிமுக,ம் நிகழ்வு

  அ க்குபங்சர்  ஒரு அறிமுகம் நிகழ்வு .   அம்பத்தூர் மாநகராட்சி உயர் நிலை பள்ளி பாடி  குப்பம் ரோடு  அண்ணா நகர் மேற்கு சென்னை 40