Tuesday, August 30, 2022

      விலங்குகளின் பிராத்தனை 


யானை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!

குதிரை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!

ஒட்டகத்தின் மீது சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில்
புன்னகை!

மனிதரோடு சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடிந்தது
பக்கத்து தெருவின்
குப்பை தொட்டியில்
சவமாய்க் கிடந்தாள்
சிறுமி!

“மனித குணம் மாறாதா?”

பிராத்தனை செய்தன
வன விலங்குகள்.

No comments:

Post a Comment

அக்குபங்சர் ஒரு அறிமுக,ம் நிகழ்வு

  அ க்குபங்சர்  ஒரு அறிமுகம் நிகழ்வு .   அம்பத்தூர் மாநகராட்சி உயர் நிலை பள்ளி பாடி  குப்பம் ரோடு  அண்ணா நகர் மேற்கு சென்னை 40