இயற்கையிடம் ஒரு கேள்வி?
வானம் கண்டு நீல நிறமறிந்தேன்
சூரிய உதயம் கண்டு மஞ்சள், ஆரஞ்சு நிறமறிந்தேன்
சூரிய அஸ்தமனம் கண்டு கருஞ்சிவப்பு நிறமறிந்தேன்
நிலவு கண்டு வெண்மை நிறமறிந்தேன்
இருட்டைக் கண்டு கருமை நிறமறிந்தேன்—
புல்லைக் கண்டு இளம் பச்சை நிறமறிந்தேன்
இலையைக் கண்டு கரும்பச்சை நிறமறிந்தேன்
யானையைக் கண்டு வெள்ளி நிறமறிந்தேன்
மானைக் கண்டு வெண்கல நிறமறிந்தேன்
குயிலைக் கண்டு பழுப்பு நிறமறிந்தேன்
வானவில்லிருந்து , ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ மற்றும் வயலட் என ஏழு வண்ணங்களை அறிந்தேன்.
மலர்களின் வாசத்தில் அதன் மனமறிந்தேன்!
கனிகளின் சுவையில் அதன் ருசியறிந்தேன்!
மிருகங்களின் உருவத்தில் அதன் குணமறிந்தேன்!
எண்ணற்ற வண்ணங்களையும், வாசத்தையும்,
குணத்தையும் கற்றுக் கொடுத்த இயற்கையே!
நீ மனித எண்ணங்களின்
வண்ணத்தையும் வாசத்தையும்
குணத்தையும் மட்டும் மறைத்தது ஏன்?
No comments:
Post a Comment