Thursday, December 23, 2021

 

எது கல்வி


வழக்கம் போல் பெரம்பூர் பஸ் ஸ்டாண்டை அடைந்தாகிவிட்டதுமணி   சரியாக 7.45 AM.

29m  அடையார் செல்லும் பேருந்து ஒரு மணி நேரத்தில் பெரம்பூரிலிருந்து அடையார் சென்று சேர்த்து விடுவார் முத்து டிரைவர்.  

29c  அதிகமாக இருந்தாலும் வெண்பாவும்  அவளது  தோழிகளும்  29m தான் தேர்ந்து எடுப்பார்கள்கடைசி வரிசையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது ஒரு அலாதி சுகம் தானேஅதுவும் இந்த பேருந்து குறைந்த தடங்களில் தான் நிற்கும்அதாவது ஓட்டேரிமோட்சம்,  KMC,  ஸ்டேர்லிங் ரோடு ஜெமினிஸ்டெல்லா மேரீஸ்லஸ்மயிலாப்பூர்மந்தவெளிசத்யா ஸ்டுடியோஅடையார்.  

ஒவ்வொரு தடம் வரும் போதும் அமர்ந்து இருப்பவரகளின் மடி கனம்   குறையும்நிற்பவர்களின் மொத்த பைகளும் அமர்ந்து இருப்பவர்கள் மடியில் தான் பயணம் செய்யும்.

ஆனால் இன்று மாட்டு பொங்கல்சென்னையே காலியாக இருக்கும்.   ஆங்கிலேயர் மக்கள் கணக்கெடுப்பின்படி திருச்செந்தூரில் தான் மக்கள் தொகை அதிகம்  என்றார்களாம். ஏன் என்றால்? அவர்கள் கணக்கு எடுத்த நாள் தைப்பூசமாம்

அதுபோல சென்னை மக்கள்தொகையை இந்நாளில் எடுத்தால் மக்கள் தொகை குறைந்து வாழும் நகரமாக அறிவிப்பார்கள். ஏன் என்றால்? சென்னையை அதிக மக்கள் வாழும் நகரமாக மாற்றிகாற்று கூட புகாத படி அடைந்து  இருந்த சக தோழமைகள் எல்லோரும் சென்னையை சுதந்திரமாக சுவாசிக்க அனுமதித்து சொந்த ஊர் சென்று உள்ளனர்பொங்கல் விடுமுறை நாட்களில் சென்னையில் எந்த வாகனத்தில் சென்றாலும் ஆனந்தமாக இருக்கும்.

மாட்டு பொங்கலை ஒட்டி  அலுவலகத்தில் நடக்கும் விழாவிற்காக வெண்பா சென்று கொண்டு  இருக்கிறாள்.                             SConstruction அடையார் கஸ்தூரிபாய் ‌நகர்‌ மெயின் ‌ரோட்டில் தான் அலுவலகம்ஒரு வரவேற்புரை இரண்டு ‌அறைகள் ஒன்று அலுவலக பணியாளர் அறை மற்றொன்று முதலாளி அறைவீடு போன்ற உணர்வு. இந்த உணர்வால் தான் அங்கு பணி செய்பவர்கள் குறைந்தது ஐந்து வருடமாவது அங்கு பணிபுரிவார்கள்.

வெண்பா பஸ்ஸில் ஒரே அரட்டை. கமலி, ஷ்யாமளா, சுகன்யா தோழர்களோடு உரையாடி வந்ததில் அலுவலகம் மிக விரைவாக அடைந்தாகிவிட்டதுவரவேற்பு அறையில் வேணி, ரம்யா மேடம் சீனியர் சுசி முவரும் பட்டு புடவையில்.  

ரம்யா மேடம்,  “வெண்பா  வா, வாஒரே கலக்கலா இருக்கேஇந்த ஜிமிக்கி எங்க வாங்கின?”

“GRT மேடம் . உங்க உடை கூட மிகவும் அழகாக இருக்கு மேடம்”.

அப்போ நான் அழகாக இல்லையா என்ற ரம்யாவிடம், “நீங்க எப்பவும் அழகு தான் மேடம்”, என்றாள் வெண்பா.

கனைத்தபடி கணக்காளர் ரமேஷ் “ஆரம்பிச்சிடிங்களா. இந்த    பெண்களுக்கு எப்போதும் இதே  பேச்சு”  எறும்பு வரிசையாக வருவது   போல பாலுசதிஷ் ஆடிட்டர் ரவி வரிசையாக வெளியே வர  அனைவரும் ரே அரட்டை.

சிறிது நேரத்தில் HONDA CITY CAR வந்தது.

சார் எல்லாம் நேரே பூஜை போடும் தளத்திற்கு  போயிட்டாங்க பெண்களை எல்லாம் கூப்பிட்டு வர சொன்னாங்க“, என்று சொல்லிக் கொண்டே டிரைவர் உள்ளே வந்தார். ஆண்கள் அவர்களின் வாகனத்தில் வந்துடுங்க என்றார் டிரைவர்.

ரவி சார் எங்களுக்கு கொஞ்சம் பிரியாணி வையிங்க எல்லாத்தையும் காலி பண்ணிடாதிங்க என்ற ரம்யாவிடம்.

பார்கலாம் பார்கலாம் என‌ கூறிய வண்ணம் அவர்களின் வாகனத்தில்    கிளம்ப ஆயத்தமானார்கள்.‌

ஸென் மேரிஸ் ரோடு அபிராமாபுரத்தில்  GROUND + 4 FLOORS அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறதுஅங்கு தான் விழாகலர் காகிதங்கள் வருக வருக என அனைவரையும் வரவேற்றன.

கட்டிட வேலை செய்யும் ஆட்கள் கூட்டமாக ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக சலசலப்பு பேச்சோடும் ஒரு சிலர்  இவர்களை பார்த்த வண்ணம்பிரியாணி வாசனை கட்டிடம் முழுவதுமாக விசிக் கொண்டு இருந்தது.

ஒரு வரிசையில் துணிகள் டேபிள் பக்கத்தில் அடையார் ஆனந்த பவன் ஸ்விட்காரம் கொண்ட கவர்கள் ஒரு புறம்புத்தம் புது 100ருபாய்    கட்டுகள்முதலாளி  கோபால் வெள்ளை உடுப்பில் அமர்ந்து இருந்தார்இந்த சூழல் வெண்பாவை தன் குடும்ப நினைவுகளை நினைவுட்டியது.

தாத்தா  வீட்டில்‌ தை பொங்கலை தொடர்ந்து வரும் மாட்டு பொங்கல்கானும் பொங்கல் என தொடர் விழா எத்தனை குதூகலமான நாட்கள்கடலில் வாழும்  மீன்கள் ஒவ்வொரு துளியையும் அனுபவித்து நீச்சல்  அடிப்பது போல விட்டில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தாண்டவத்தில்.

ஆம்புர் சாய்பான் சாய்பு தெருபெயரே சொல்லும் முஸ்லிம் தோழர்கள் தான் நினைவுக்கு வரும். பெரும்பாலும் முஸ்லிம் தோழர்கள் வாழும் தெரு அதுஅந்த தெருவில் நாயுடு வீடு என்றால் தெரியாதவர்கள் யாருமில்லைதொடர்ந்து மூன்று வீடுகள் மட்டுமே தனித்து இருக்கும்ஓரே வண்ணம்ஓட்டு வீடு.

ஒவ்வொரு வீடும் இரண்டு பெருந்திண்ணைகள் கொண்டு இருக்கும்செம்மண் பூசின படிகள்மோட்டார் பைக் விட்டில் இருந்து வெளியே வர படிக்கட்டுகள் மத்தியில் அப்போதே சரக்கு மரம் போல் வழவழப்பான  தரை‌. தினமும் விதவிதமான கோலங்கள்லக்ஷ்மி கடாட்சம் வாசலை பார்த்தாலே தெரியும்.

தாத்தாவின் அப்பா கோபால் சாமி நாயுடு அம்மா பத்மாவதி அம்மாள்தாத்தா உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள்பெரிய கூட்டு குடும்பம்முன்று பேர்களுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும் போது தான் தனிக்குடித்தனம் சென்றார்கள்அதுவரை கூட்டு குடும்பம் தான்அதன் பின்னும் பிள்ளை மருமகள் பேரன் பேத்தி என்று கூட்டு குடும்பமாக தான் வாழ்ந்து வந்தார்கள்பெரிய சமையல் அறைபாத்திரங்கள் எல்லாம் பெரிய பெரிய டேக்ஸாதாத்தாபாட்டிமாமாஅத்தை அவர்கள் பிள்ளைகள் என சிறும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் கூடினாலே விழா என்ற உணர்வு அளித்து விடும்இந்த மொத்த குடும்பமும் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் திருவிழா தான்முல்லை தோட்டம்தென்னந்தோப்பு வெண்பாவின்  பெரிய மாமா தான் பார்த்து கொள்வார்விடியற்காலை ஐந்து மணிக்கலகெல்லாம் மாமா குளித்து பளிச்சுனெ   இன்றைய பெங்களுர் அய்வேஸ் வரப்பு மேலா அமர்ந்து விடும் மாமாஅப்போது  தோல் தொழிற்சாலை அதிகமாக இல்லாத நேரம்நிலத்தில் தின கூலி வேலைக்கு வருபவர்கள்  தான் அதிகம்அதிலும் பெரிய மாமா என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.

பொங்கல் போது, வீதியில் 10 வீடுகள் சேர்த்து பந்தல் போட்டு லைட்சீரியல் பல்பு  என ஒரு வாரம் முன்னதாகவே போட்டு விடுவார்கள்பாத்திரங்கள் சாமான் அறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே எடுக்கப்படும்பிரியாணி டேக்ஸாபெரிய  தாம்மாள தட்டு பளபளப்பாக தேய்த்து தயாரான நிலையில்கட்டை வைத்து கற்புரம் கொளுத்தி டேக்ஸா வைத்து மட்டன் பிரியாணிமூட்டைதயிர் பச்சடிகத்திரிக்காய் தொக்கு 12 மணிக்கு தயாராகி விடும்

நிலத்தில் இருந்து அனைவரும் காலை பத்து மணிக்கே முதல் வரிசையில்  வரிசையாக வர ஆரம்பித்து விடுவார்கள்தாத்தா பெரிய மாமா தான் அன்றைய கதாநாயகர்கள்வரிசையாக இரண்டு பக்கமும் போட்ட  நாற்காலிகள் நிறைந்து விடும்குடும்பத்தோடு நிலத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம்  வரிசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கமாமாதான் அன்று மேற்பார்வையாளர்அதனாலேயே வெட்கத்தோடு பெண்கள் சாப்பிடுவார்கள். “முதலாளி வராருடீ.”

மாமா, “என்ன கனகா இன்னும் கொஞ்சம் கறி  வெச்சிக்கோ என சொல்லஅவர்கள் வெட்கத்துடன் நானி கோனி முகம் சிவக்க வெட்கத்தோடு சாப்பிடும் அழகே தனி”. வெண்பா பெரிய மாமாவோடு அனைவருக்கும் உணவு பரிமாறுவாள்அவள் தான் பெரிய பேத்தி.

சென்னையில் கல்லூரியில் படித்து முடித்து இருக்கும் வெண்பாவிற்கு நிலம் என்றால் எத்தனை பெரிய சொத்து என தெரியாதுஅவள் இலக்கு எல்லாம் கல்லூரி படித்து அலுவலகத்தில் வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும் என்பது தான்.

அனைத்து தொழிலாளிகள் சாப்பிடும் அதே நேரம் வீட்டினுள்ளே தாத்தாவின் தம்பிதம்பி பெண்டாட்டிஅவர்கள் பிள்ளைகள்,  மாப்பிள்ளை மகள்கள்மருமகள்கள்பேரன்கள்பேத்திகள் என வீட்டில் பந்தி பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்சிரிப்பு சத்தம் காற்றை கிழித்து கொண்டு வெளியே வரும்.

சாப்பாடு முடிந்தவுடன் உடைகள் வழங்கும் வழக்கம்மாப்பிள்ளை பெண்ணுக்குதான்  முதல் மரியாதைவரிசையாக மொத்த குடும்ப உறுப்பினர்களின் ஆடை வழங்கும் விழா முடியும்.

பின் நிலத்து தொழிலாளிபட்டறையில் வேலை செய்யும் பணியாளர்கள் என வரிசையாக  150 பேர் ஆடைகள், தனியாக பணகவர் பெற்றுகொண்டு செல்வார்கள்மாலைவரை இந்த நிகழ்வு தொடரும்வருடந்தோறும்  இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.

அந்த வருடம் தாத்தா அனைத்து வேலை முடிந்தவுடன் வெண்பாவிற்கு வரன் பார்த்து இருக்கிறேன் என ஆரம்பித்தார்.

தெரிந்த பையன் +2 படித்து IIT Diploma செய்து இருக்கிறார்நல்ல பையன் உன்னை கண் கலங்காமல் பார்த்து கொள்வார்கள் என ஆரம்பித்தார்.

திருமணம் என்ற பேச்சை கேட்டவுடன்வெண்பாதாத்தா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்என சினுங்க ஆரம்பித்தாள்.

என் செல்லம் என தாத்தா வெண்பாவை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து கொண்டார்.” முதல் பேத்தி செல்ல பேத்தி வெண்பாபெண்மருமகளிடம் இருக்கும் கரார் மனிதராக  நாயுடுவை பேத்தியிடம் பார்க்க முடியாது.

ஏன்டா செல்லம் இப்போ கல்யாணம் பண்ணாமல் எப்போ செய்வதுநம்ம நிலம் இருக்குதொழில் இருக்கு இதை பார்த்து கொள்”.

இல்லை தாத்தா, நான் காலேஜ் முடித்துவிட்டேன்கணினி பட்டயம் படித்து முடித்தவுடன்  கேம்பஸ் முலமாகவே வேலை கிடைத்து விடும். அலுவலகத்தில் வேலைக்கு போகனும்”. நான் சம்பாதிக்கணும் என்றாள்அதுமட்டுமல்ல குடும்பத்தில் கல்லூரி வாசப்படியில் முதல் காலை எடுத்து வைத்தவள் வெண்பா மட்டுமேமுதல் பட்டதாரி அவளின் லட்சியம் நன்கு படிக்க வேண்டும். படிக்க வேண்டும்

நீ ஏன்டா வேலைக்கு போகனும்நாமே பலருக்கு வேலை தரலாம்என்றார் நாயுடு.

இல்லைதாத்தா நான்  வேலைக்குதான் போவேன்என் காலில் நான் நிக்க வேண்டும் என ஆடம் பிடித்தாள்”, வெண்பா.

குடும்பத்தில் அனைவருக்கும் ஒரு வித பயம் நாயுடுவிடம்ஆனால் தாத்தா பேத்தியிடம்  எப்போதும் சரண்டர்தான்.

தாத்தாவெண்பாவின் குழந்தைதனம் மாறாத முகத்தை பார்த்துக்கொண்டேசரிமாஉன்  இஷ்டம் என கூறிவிட்டார்குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சிஅதன்பின் வெண்பா விருப்படியே இந்த வேலை கிடைத்ததுஆனால் தாத்தா, திடிர் என ஒரு நாள் இயற்கை எய்தினார்அதன் பின் மாட்டு பொங்கல்விழா கனவானது.

மனகண்ணில் அன்று படிக்காத தாத்தா கொடுக்கும் இடத்தில் கம்பீரமாக முதலாளியாக அமர்ந்து இருந்தார், படித்த தன்னிடம் இல்லாதது படிக்காத தாத்தாவிடம்  என்ன இருந்தது? அந்த அனுபவ படிப்பை ஏன் இந்த ஏட்டு படிப்பு தரவில்லை அதனுடைய இடைவெளி எது? இதை ஏன் இத்தனை நாள் நாம் சிந்திக்கவில்லை என நினைத்த வண்ணம் அமர்ந்து இருந்தாள் வெண்பா

முதலாளி,“வெண்பா வாங்க மா” என அழைக்க நினைவுகள்              கலைந்ததுநிஜத்தில் விழித்து குடும்பத்தில் முதல் பட்டதாரி       தொழிலாளி வெண்பா பொங்கல் கிஃப்ட் வாங்க எழுந்து சென்றாள்

வெளியே ஒலிபெருக்கியில் புதிய கல்விதிட்டம் பற்றி விவாதம் நடந்து கொண்டு இருந்தது.

No comments:

Post a Comment

அக்குபங்சர் ஒரு அறிமுக,ம் நிகழ்வு

  அ க்குபங்சர்  ஒரு அறிமுகம் நிகழ்வு .   அம்பத்தூர் மாநகராட்சி உயர் நிலை பள்ளி பாடி  குப்பம் ரோடு  அண்ணா நகர் மேற்கு சென்னை 40